பேச்சுவார்த்தை கூட்டத்தில் பொதுமக்கள் பேச்சு பந்தநல்லூரில் வெளிமாநில சாராயம் விற்ற 3 பேர் கைது

கும்பகோணம், ஜூன் 27: கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூரில் அனுமதியின்றி வெளிமாநில சாராயத்தை பாட்டிலில் அடைத்து டாஸ்மாக் பிராந்தி என விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார், பந்தநல்லூர் அடுத்த கருப்பூரில் அனுமதியின்றி விற்பனை செய்த கலியபெருமாள் (40), கீழமணக்குண்டு மெயின்ரோட்டில் விற்பனை செய்த குணசேகரன் (44), சிறுகடம்பூர் வடக்கு தெருவில் விற்பனை செய்த அய்யாப்பிள்ளை (40) ஆகியோர் வெளிமாநில சாராயத்தை பாட்டிலில் அடைத்து டாஸ்மாக் கடை பிராந்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: