அரசு பள்ளிக்கு நலத்திட்ட உதவி

இடைப்பாடி, ஜூன் 26: இடைப்பாடி அருகே அரசு பள்ளிக்கு இந்திய கப்பற்படை பணியாளர் குழு சார்பில், நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

இடைப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சியில் மலை மாரியம்மன் காலனியில், ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில், புரவலர் திட்டத்தின் கீழ், இப்பள்ளிக்கு, இந்திய கப்பற்படை பணியாளர் குழு சார்பில், கம்ப்யூட்டர், டேபிள், ஸ்மார்ட் போர்டு உள்ளிட்டவற்றை, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயாவிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொன்னம்பாளயைம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்தனராஜ், வட்டார வளமைய கருத்தாளர் செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: