மேச்சேரி அதிமுக சார்பில் பத்ரகாளியம்மன் கோயிலில் யாகம்

மேட்டூர், ஜூன் 26: மேச்சேரி ஒன்றிய அதிமுக சார்பில், மழைவேண்டி மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மேச்சேரி ஒன்றிய அதிமுக சார்பில் மழைவேண்டி, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பத்ராகாளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பூஜைக்கு, மேட்டூர் எம்எல்ஏ செம்மலை முன்னிலை வகித்தார். சிறப்பு வேள்வி மற்றும் சிறப்பு பூஜை சுமார் 2மணிநேரம் நடந்தது. சிறப்பு யாகத்திற்கு பின்னர் கோயிலை வளம் வந்த ஆதிமுகவினர், பத்ரகாளியம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையிலும் பங்கேற்றனர். இந்நிகழ்சியில் மேச்சேரி ஒன்றிய அதிமுக செயலாளர் சதாசிவம், பேரூர் செயலாளர் மாணிக்கம், மேச்சேரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் குமார், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சந்திரசேகரன், அண்ணாமலை, செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: