ஜெயங்கொண்டம், ஜூன் 25:
ஆண்டிமடம் அருகே மது குடித்து விட்டு தூங்கிய தொழிலாளி அதிகாலையில் இறந்தார்.ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடத்தில் அறிவழகன் என்பவர் நடத்தி வந்த ஹோட்டலில் கூவத்தூரை சேர்ந்த வனத்தையன் (50) என்பவர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அறிவழகன் கடையை மூடி விட்டு சென்று விட்டார். வனத்தையன் வேலையை முடிந்ததும் மது அருந்திவிட்டு சாப்பிடாமல் கடையின் எதிர்புறம் படுத்தவர் அதிகாலையில் இறந்து கிடந்தார்.இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர் அறிவழகன் புகார் செய்தார். ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் (பொ) மலைச்சாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். சடலத்தை வாங்க உறவினர்கள் யாரும் இல்லாததால் போலீசாரே மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாளர்களின் துணையோடு அடக்கம் செய்தனர்.