நாகை, ஜூன் 25: அம்மா திட்டத்தின் கீழ் இரண்டு சக்கர வாகனம் பெற வரும் 4ம் தேதி வரை விண்ணப்பிக்க கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் இலவச அம்மா இரு சக்கர வாகனம் வாங்க மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியமாக ரூ.25 ஆயிரம் இவற்றில் எது குறைவோ அந்த தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதலாக மானியம் வழங்கப்படும். இதற்கான பயனாளிகள் அமைப்பு சார்ந்த, சாராத நலவாரியத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணிபுரியும் மகளிர், சுயதொழில்புரிவோர், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுதிட்டங்களில் பணிபுரியும் பெண்கள், ஊராட்சி குழு கூட்டமைப்பு உறுப்பினர், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், மக்கள் கற்றல் மையங்களில் பணிபுரிவோர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளில் உள்ள மகளிர் மட்டும் விண்ணப்பிக்க தகுதிபடைத்தவர்கள்.