ஆட்டையாம்பட்டி, ஜூன் 21: ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் எதிரில், கடந்த 1978ம் ஆண்டு பேரூராட்சி சார்பில் 5 கடைகள் கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டது. இங்கு பழக்கடை, மளிகை கடை, டீக்கடை மற்றும் மருந்து கடைகள் இயங்கி வருகிறது. கடைகளுக்கு ₹50 ஆயிரம் முதல் ₹65 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டிடம், கட்டி 41 ஆண்டுகள் ஆவதால், விரிசல் விழுந்து உறுதித்தன்மை இழந்துள்ளது. மேற்கூரையில் பல இடங்களில் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது.