பெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ தேனியில் நன்றி அறிவிப்பு

தேனி, ஜூன் 21: பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்.18ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சரவணக்குமார் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் கடந்த மூன்று நாட்களாக தேனி நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். தேனி நகர் பொம்மையக்கவுண்டன்பட்டியில் உள்ள சாலைப்பிள்ளையார் கோயிலில் சாமிகும்பிட்டு வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி அறிவிப்பை தொடங்கினார். மூன்றாவது நாளாக நேற்று அல்லிநகரம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது தேனி நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடன் தேனி நகர திமுக பொறுப்புக்குழு தலைவர் முருகேசன், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: