காரைக்குடி, ஜூன் 21: காரைக்குடியில் கனரா வங்கியின் விரிவுபடுத்தப்பட்ட கிளை துவக்க விழா நடந்தது.காரைக்குடி செக்காலைரோட்டில் கனரா வங்கி விரிவுபடுத்தப்பட்ட கிளை துவக்கவிழா நடந்தது. வங்கி முதன்மை மேலாளர் அன்வர்சதக் வரவேற்றார். மதுரை வட்ட பொதுமேலாளர் பரமசிவம் தலைமை வகித்தார்.துணை பொதுமேலாளர் மாதவராஜ் முன்னிலை வகித்தார். சங்கராபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மாங்குடி குத்துவிளக்கு ஏற்றினார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் புதிய கிளையை திறந்து வைத்து பேசுகையில், வங்கி சேவையை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப இந்த வங்கியில் அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சிகளும் செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களும் வாடிக்கையாளர்களிடம் அன்புடன் பழகி சிறந்த சேவையாற்றுகின்றனர்.