கீழ்வேளூர், ஜூன் 21: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ராதாமங்கலம் தெற்காலத்தூர் சாந்தநாயகி அம்மாள் சமேத நாகநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. .மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் யாக பூஜை தொடங்கியது. 18ம் தேதி மாலை முதல்கால யாக பூஜையும், 19ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், இரவு மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.