கீழ்வேளூர், ஜூன் 21: கீழ்வேளூர் அருகே தீராத வயிற்று வலியால் விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து
கொண்டார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கோகூரை சேர்ந்தவர் தம்பையா (60). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்தது. வயிற்று வலி அதிகமானதால் அவதிபட்ட தம்பையா வயலுக்கு தெளிக்க வைத்திருந்த விஷத்தை குடித்து விட்டார்.