வேதாரண்யம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகும் அவலம்

வேதாரண்யம், ஜூன் 21: வேதாரண்யம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை

விடுக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் தாலுகா மருதூர் கடைதெருவில் செல்லைகோன் ஆற்றுக்கு குறுக்கே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இதன் மூலம் வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த குழாயில் பொருத்தப்பட்டுள்ள வாழ்வு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

வீணாக செல்லும் தண்ணீரை அப்பகுதி மக்கள் பிடித்து செல்கின்றனர். தமிழகம் முழுவதும் வறட்சியில் தண்ணீர் தட்டுபாடு நிலவிவரும் நிலையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து அக்குழாயில் நிரந்திரமாக பைப் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: