மயிலாடுதுறையில் மழை வேண்டி பரிமள ரெங்கநாதர் கோயிலில் சகஸ்ரநாம அர்ச்சனை

மயிலாடுதுறை, ஜூன் 21: மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோயிலில் மழைவேண்டி சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

மயிலாடுதுறை திருவிழந்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய பரிமளரங்கநாதர் கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயில் மழைவேண்டியும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்லமழை பெய்து காவிரி ஆற்றில் தங்குதடையின்றி தண்ணீர்வர வேண்டும். பரிமளரங்கநாதர் கோயிலில் நேற்று காலை 9 மணியவில் சகஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து திருப்பாவை ஆழி மழைகண்ணா பாராயணமும் மதியம் 12 மணிவரை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Related Stories: