அரியலூர், ஜூன் 21: மத்திய அரசின் புள்ளி விபரங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மற்றும் திட்டங்களை நிறைவேற்றும் அமைச்சகம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் 7வது பொருளாதார கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ளது. இந்த பணிக்கான பயிற்சி முகாம், அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அரியலூரில் உள்ள தேசிய புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பு அலுவலக இணை இயக்குனர் ராமமூர்த்தி, முதுநிலை புள்ளி விபர அதிகாரிகள் வினோத்தரசிங், அபர்ணா நாராயணன் ஆகியோர் பங்கேற்று அனைத்து தரப்பு மக்களின் பொருளாதார நிலை தொடர்பான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.