குரங்குமுடி எஸ்டேட்டில் சிறுத்தையை கண்காணிக்க கேமரா பொருத்தம்

வால்பாறை, ஜூன் 21:வால்பாறை அடுத்த உள்ள குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் சிறுத்தை ஒன்று புகுந்து காட்டுப்பன்றியை வேட்டையாடி உள்ளது. மேலும் அருகே உள்ள பாரதிதாசன் நகர் அங்கன்வாடி மையம் அருகே உலாவுததால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பேரில் மானம்பள்ளி வானச்சரகர் நடராஜ் தலைமையில் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க  இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Related Stories: