திருமயம், ஜூன் 21: அரிமளம் அருகே கே.புதுப்பட்டி விசாலாட்சி அம்மன் உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில், சித்திவிநாயகர், பாலமுருகன், ஹரிஹர ஜயப்பன் கோயில் திருப்பணி வேலைகள் கடந்த மாதம் முடிவடைந்தது. விழாவையொட்டி கோயில் முன்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு கடந்த 17ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 9.30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி சிவாச்சாரியர்கள் கும்பாபிஷேகம் செய்தனர்.