வயிற்றுவலியால் அவதி விஷமருந்தி வாலிபர் தற்கொலை

கந்தர்வகோட்டை, ஜூன் 21: கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியை சேர்ந்த வாலிபர் வயிற்று வலிக்கு எலி மருந்தை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் பிரதீப் (21). இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி எலிமருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்தவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: