சிறுமி மாயம்

நெய்வேலி, ஜூன் 19:   நெய்வேலி அடுத்த ஊமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், கூலித்தொழிலாளி. இவரது மகள் அபிநயா (16). இவர் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு விருத்தாசலத்தில் தையல் பயிற்சி பெற்று வருகிறார். நேற்று முன்தினம் காலை தையல் பயிற்சி வகுப்புக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற அபிநயா மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தோழிகள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அபிநயாவின் தாய் லதா கொடுத்த புகாரின் பேரில் ஊமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

Related Stories: