மூணாறு, ஜூன் 18: மூணாறு அருகே பழைய மூணாறு பகுதியில் உள்ள பிஆர்சி பள்ளிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள் திருடு போனதாக பள்ளி முதல்வர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மூணாறு அருகே பழைய மூணாறு பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குழந்தைகள் படிக்கும் பிஆர்சி பள்ளி செயல்படுகிறது. கடந்த ஆண்டு மூணாறில் பெய்த கனமழை காரணமாக இந்தப் பள்ளி முற்றிலும் சேதமடைந்தது. இதன் மூலம் குடிநீருக்காக குழந்தைகள் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் மூணாறு கிராம நிர்வாகம் சார்பில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன.