மாணவியை கேலி செய்த வாலிபர் கைது

உத்தமபாளையம், ஜூன் 18: உத்தமபாளையம் அருகே பிளஸ் 2 மாணவியை கேலி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். உத்தமபாளையம் அருகே உள்ள கருக்கோடையை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அண்ணாமலை(25). இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவியை தொடர்ந்து கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கோம்பை போலீசார் வழக்குப்பதிந்து, அண்ணாமலையை கைது செய்தனர்.

Related Stories: