காளையார்கோவில், ஜூன் 18: காளையார்கோவில் பஸ்நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருளாக உள்ளது. மதுரை - தொண்டி மாநில நெடுஞ்சாலை காளையார்கோவில் பஸ்நிலையம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது சில நாட்களாக எரியாமல் காட்சிப் பொருளாக உள்ளது. காளையார்கோவில் பஸ்நிலையத்தைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதி என்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.