சிவகங்கை, ஜூன் 18: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. தலைமை வகித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது: சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்னதாகவே அனைத்து நீர்வரத்து கால்வாய்களை சீர்படுத்துவதுடன் குளங்கள் மற்றும் கண்மாய்களில் தூர்வாரும் பணியை முடிக்க வேண்டும்.
தற்போது 14 குளங்களில் தூர்வாரும் பணி நடத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மேலும் மூன்று குளங்களும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.