ஆத்தூர், ஜூன் 18: ஆத்தூரில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு, இந்திய மருத்துவ சங்கத்தின் ஆத்தூர் கிளை சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மருத்துவர்களுக்கு எதிரான வன்செயல்களுக்கு மத்திய அரசு கடுமையான சட்டம் இயற்ற வேண்டியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் ஆத்தூர் கிளை தலைவர் டாக்டர் லதா தலைமை வகித்தார்.