பல்லவராயன்பட்டியில் விநாயகர் சிலை திருட்டு

கந்தர்வகோட்டை,ஜூன்18: கந்தர்வகோட்டை அருகே பல்லவராயன்பட்டியில் விநாயகா் சிலையை காணவில்லை என பொதுமக்கள் போலிசில் புகார் அளித்தனர்.கந்தா–்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன்பட்டி கிராமத்தில் பள்ளிகூடம் அருகில் இருந்த விநாயகர் கல்சிலையை நேற்று அதிகாலை யாரோ மா்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர் என கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளித்தனர். ஏற்கனவே அதே கிராமத்தில் வேறுபக்கம் இருந்த விநாயகர் சிலையை சிலர் கடத்தி செல்ல முயன்றபோது அதை தடுத்து விநாயகர் சிலையை மீட்டு அதே இடத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் கிராமத்தில் இருந்த விநாயகர் சிலை திருட்டு போயுள்ளது. தற்போது காணாமல் போயுள்ள விநாயகர் சிலை இருதரப்பினரிடையே இடப்பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள இடத்தில் இருந்த விநாயகா் சிலையாகும்.விநாயகா் சிலை திருட்டு சம்பவம் குறித்து அக்கிராமத்தை சேர்ந்த கணேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கந்தா–்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories: