கோவை, ஜூன் 14: கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பழனியம்மாள் முதலாமாண்டு மாணவர்கள், அவர்களது பெற்றோர்களை வரவேற்று, துறை தலைவர்களை அறிமுகப்படுத்தினார். மாற்றம் நிறுவனத்தின் அறங்காவலர் சுஜித்குமார் பேசுகையில், ‘‘தன்னம்பிக்கையோடு வாழ்பவர்களே வெற்றி பெற்றவராக உள்ளனர். எனவே, மாணவர்கள் அதனை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.