கோயில் கும்பாபிஷேகம்

திருமயம், ஜூன் 14: அரிமளம் அருகே வாசுகிபுரம் கிராமத்தில் சங்கிலி கருப்பர், சின்ன கருப்பர், மதுரைவீரன், நல்லதங்காள், சன்னாசி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி  மக்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து கிராமத்தினர் உதவியுடன் கோயில் புதுப்பணி ஓராண்டாக நடந்து வந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து பணிகளும் முடிந்தது. இந்நிலையில் கோயில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 நாட்களாக யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று காலை கோயில் கும்பத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: