வேதாரண்யம், ஜூன் 14: கோடியக்கரை வனப்பகுதியில் கடல்நீர் புகுந்ததால் சரணாலத்தில் பாதிப்பு ஏற்பட்டு மூலிகைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடல்காற்று பலமாக வீசுவதால் உப்பள பகுதி மற்றும் காட்டு பகுதியில் கடல் நீர் புகுந்து ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் கடல்நீர் சூழ்ந்துள்ளது. இந்த காடுகள் 27 சதுர கி.மீ பரப்பளவில் பசுமைமாறா காடுகளாக உள்ளது. இங்கு மான், குதிரை, முயல், நரி, குரங்கு போன்ற வனவிலங்குகளும், பறவைகளும் அதிகம் உள்ளன. கோடியக்கரையில் நின்றுதான் ராமர் இலங்கையை பார்த்ததாக வரலாறு கூறுகிறது. அவர் நின்று பார்த்த இடத்தை ராமர் பாதம் என்று அழைக்கின்றனர்.