சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கை பஸ்நிலையம் முன், தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடந்தது. எஸ்பி ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களுக்கு குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.