விருதுநகர், ஜூன் 12: பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 100 சதவீதம் பாடுபடுவேன் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகரில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், விருதுநகர் மக்களவை தொகுதி காங்.,எம்பி மாணிக்கம் தாகூர், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர்கள் தங்கம்தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், விருதுநகர் தொகுதி எம்எல்ஏ சீனிவாசன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த மாவட்ட, நகர செயலாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியதாவது: