பட்டுக்கோட்டை, ஜூன் 12: பட்டுக்கோட்டை நகர பகுதியில் ஷேர் ஆட்டோ வசதி செய்துதர வேண்டுமென பட்டுக்கோட்டையில் நடந்த காப்பீட்டு கழக ஊழியர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பட்டுக்கோட்டையில் காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளை மாநாடு நடந்தது. கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சம்பத் ஆண்டறிக்கை வாசித்தார். நீலாயதாட்சி வரவேற்றார். கோட்ட சங்க துணை பொருளாளர் விஜயகுமார் தொடக்க உரையாற்றினார். கோட்ட சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ் நிறைவுரையாற்றினார். தீர்மானங்களை பாலசுப்ரமணியன் முன்மொழிந்தார்.மாநாட்டில் பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். தமிழகத்தில் மத்திய, மாநில அரசு பணிகளில் 100 சதவீதம் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கே வேலை வழங்க வேண்டும். பட்டுக்கோட்டை நகர பகுதிகளில் ஷேர் ஆட்டோ வசதி செய்து தர வேண்டும். காரைக்குடி- பட்டுக்கோட்டை- திருத்துறைப்பூண்டி- திருவாருர் ரயில் சேவையை தொடர்ச்சியாக செயல்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய அகல ரயில் சேவையை விரைவாக துவங்க வேண்டும்.