பாபநாசம், ஜூன் 12: பாபநாசத்தில் நடந்த அம்மாப்பேட்டை சரகத்துக்கான ஜமாபந்தியில் 25 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் முழுவதும் வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடந்து வருகிறது. இதில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதேபோல் பாபநாசம் வட்டாரத்திலும் ஜமாபந்தி நடந்து வருகிறது. அதன்படி பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அம்மாப்பேட்டை சரகத்துக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது.