குடந்தை ஆர்டிஓவிடம் மனு குறைதீர் கூட்டத்தில் நரிக்குறவர்கள் மனு தஞ்சை நீதிமன்றத்தில் ஓட்டுனர் பதவிக்கான நியமன அறிவிப்பு ரத்து

தஞ்சை, ஜூன் 11: தஞ்சை மாவட்டத்தில் நீதித்துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் பதவிக்கான தற்காலிக அடிப்படையில் நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு 2017ம் ஆண்டு ஜூலை 19ம் தேதியன்று இந்நீதிமன்றத்தில் விளம்பர நாளிதழ் மற்றும் தஞ்சை நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக ஓட்டுனர் பதவிகளை நிரப்புவதற்தான விளம்பரம் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதே விபரம் தஞ்சை மாவட்ட நீதித்துறை இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: