கறம்பக்குடி ,ஜூன் 11: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். விவசாய தொழிலாளி . இவரது மனைவி பெயர் இந்திராணி. இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார்.
இவர் நன்கு படித்ததால் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கறம்பக்குடி யில் உள்ள தனியார் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி 491மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் பிறகு கந்தர்வகோட்டை பகுதியில் 100சத வீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மேல் நிலை பள்ளியில் 12ம் வகுப்பில் 1139மதிப்பெண் பெற்று மருத்துவர் ஆக வேண்டும் என்று கடந்த 2017-18 ம் ஆண்டு கல்வியில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.