சின்னமனூர், ஜூன் 11: சின்னமனூர் அருகே முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் மார்க்கையன்கோட்டை தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் அருகே எல்லப்பட்டியில் முல்லைப் பெரியாற்றுக்குள் மார்க்கையன்கோட்டை தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் கருங்கற்கள் பெயர்ந்து பெரும் பள்ளங்களாக காட்சியளிக்கிறது. தண்ணீர் வரும் போது யாராவது இறங்கினால் பள்ளத்திற்குள் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பதற்குள் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.