மாவட்டத்தில் 10 தாலுகாவில் இன்று வருவாய் திட்ட முகாம்

ஈரோடு, ஜூன் 7: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில் இன்று (7ம் தேதி) வருவாய்துறை திட்ட முகாம் நடக்கிறது. அதன்படி, ஈரோடு தாலுகாவில் மேட்டுநாசுவம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், பெருந்துறை தாலுகாவில் தென்முகம் வெள்ளோடு குமாரவலசு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் முகாசி அனுமன்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது. கொடுமுடி தாலுகாவில் தளுவம்பாளையம் சமுதாய கூடத்திலும், பவானி தாலுகாவில் குறிச்சி மாணிக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், சத்தி தாலுகாவில் கெம்பநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், கோபி தாலுகாவில் நாதிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடக்கிறது. அந்தியூர் தாலுகாவில் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், தாளவாடி தாலுகாவில் பையன்னபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், நம்பியூர் தாலுகாவில் வேமாண்டாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஈரோடு கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Related Stories: