மணல் கடத்திய வாலிபர் கைது

திருச்சி, ஜூன் 7: திருச்சி உறையூர் புத்தூர் பகுதி விஏஓ செந்தில்குமார் உய்யகொண்டான் திருமலை பகுதியில் உள்ள கோரையாற்றில் திடீரென ஆய்வு நடத்தினார். அப்போது ஆற்றில் உய்யகொண்டான்திருமலையை சேர்ந்த முத்து(31) என்பவர் மாட்டு வண்டியில் மணலை அள்ளி மூட்டையாக வைத்து கடத்த இருந்தார். அரசு மருத்துவமனை போலீசுக்கு செந்தில்குமார் தகவல் அளித்தார். அங்கு சென்ற எஸ்ஐ அழகர், முத்துவை கைது செய்து மாட்டு வண்டியில் இருந்த 50 சாக்கு மூட்டையில் இருந்த மணலை பறிமுதல் செய்தார்.

Related Stories: