உத்தமபாளையம் தாலுகாவில் ஜமாபந்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க சப்கலெக்டர் உத்தரவு

உத்தமபாளையம், ஜூன் 5: உத்தமபாளையம் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சப்கலெக்டர் உத்தரவிட்டார். உத்தமபாளையம் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது. முதல்நாளில் மார்க்கயன்கோட்டை பிர்காவில் உள்ள குச்சனூர், சங்கராபுரம், பொட்டிப்புரம், தேவாரம் பிர்காவில் பண்ணைப்புரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவராக உத்தமபாளையம் சப்கலெக்டர் வைத்திநாதன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றார். உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தாசில்தார் சத்யபாமா, சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகேசன், சப்கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: