பெருநாவலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

புதுக்கோட்டை, ஜூன் 4: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று காலை கல்லூரி கலை அரங்கில் கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமையில் நடைபெற்றது. அனைத்து பாடப்பிரிவு மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை மாநில மற்றும் மன்டல அளவில் விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள் மற்றும் பிஏ, தமிழ் பிஏ, ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவிற்கு விண்ணப்பித்து கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்களுக்கு அனுமதி சான்றிதழ் வழங்கினார். கல்லூரி முதல்வர் சுகந்தி இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை தலைவர் என்கே ராஜேந்திரன், தமிழ்த்துறை தலைவர் திருவாசகம், கணிணி அறிவியல் துறை தலைவர் ரமேஷ், ஆங்கிலத்துறை தலைவர் ஏ. கணேசன், கலந்தாய்வு குழு சிறப்பு உறுப்பினர் காளிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் கலந்தாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொன்டனர்.

Related Stories: