மதுரை, ஜூன் 4: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையை 250 ஆக உயர்த்திக்ெகாள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி ெகாடுத்துவிட்டதால், நடப்பாண்டில் இக்கல்லூரியில் 250 மாணவர்களுக்கான சேர்க்கை நடக்க உள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கை 150 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக சுகாதாரத்துறையும், மதுரை மருத்துவக் கல்லூரியும் போராடி வந்தது. இந்திய மருத்துவக் கவுன்சில் இந்த அனுமதியை வழங்க இழுத்தடித்து வந்தது. ஒவ்வொரு முறையும் ஆய்வுக்காக வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஏதாவது ஒரு குறைபாட்டை கூறி காலம் தாழ்த்தி வந்தனர். அதிகாரிகள் கூறும் குறைபாடுகளை மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் சளைக்காமல் செய்துவந்தது.