காரைக்கால், ஜூன்.4: காரைக்கால் கீழகாசாகுடி சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உத்ஸவத்தையொட்டி, பந்தல்கால் முகூர்த்தம் சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் கீழகாசாக்குடியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் தீமிதி உத்ஸவம் நிகழ்ச்சி 15 நாட்களுக்கு சிறப்பாக நடத்தபட்டு வருகிறது. இத்திருவிழா நடத்துவதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. பந்தல் காலுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப்பின் கோயில் வாயிலில் கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் முன்னிலையில் பந்தல்கால் நடப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.