வேலூர், ஜூன் 4:உறவினருடன் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததுடன் கால்நடைகளை கொன்றுவிடுவதாக ஊர் பஞ்சாயத்தார் மிரட்டுகின்றனர் என்று கலெக்டரிடம் பெண் புகார் அளித்துள்ளார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்தீபன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தில் 122 பேர், வேலூர் மாவட்டத்தில் 79 பேர் என தினக்கூலி அடிப்படையில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். நாங்கள் மருத்துவமனை துப்புரவு பணி, வார்டு பணி, அலுவலர்களுக்கு உதவிப்பணி என 15 வகையான பணிகள் செய்து வருகிறோம். எங்களுக்கு 2018ம் ஆண்டு முதல் ₹311 தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் எங்களை போன்ற தினக்கூலியாக அரியலூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களுக்கு ₹400க்கு மேல் வழங்கப்படுகிறது. எங்களுக்கும் அவர்களை போல தினக்கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்’ என்றனர்.வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் அகஸ்தீஸ்வரர் கோயில் டிரஸ்ட் சார்பில் அளித்த மனுவில், ‘வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில், லோகநாயகி சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இந்த கோயிலுக்கு மின்சார வசதி தரும்படி கோட்டை சுற்றுச்சாலை மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தோம்.