கும்பகோணம், மே 30: கும்பகோணம் நவீன கட்டுப்பாட்டு அறையில் உள்ள சிசிடிவி பதிவுகளை தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் ஆய்வு செய்தார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு, வாகன திருட்டு, வீடுகளில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. மேலும் நகர பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளால் வாகன நெருக்கடியாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததால் தஞ்சை எஸ்பி மகேஸ்வரனுக்கு பொதுமக்கள் புகார் அனுப்பினர்.