குத்துச்சண்டை போட்டி

தேனி, மே 30:  தேனி மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில் விஎஸ் அகாடமி சார்பில் தென்மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடந்தது. இதில் உடல் எடை, வயது அடிப்படையில் 13 முதல் 14 வயதுக்குடட்டோர் சப்ஜூனியர் பிரிவிலும், 15 வயது முதல் அதற்கு மேற்பட்டோர் ஜூனியர் பிரிவிலும், 18 வயதை தாண்டியவர்கள் எலைட் பிரிவிலும் போட்டியிட்டனர். இதில் ப்ல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 190 மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். இப்போட்டிகளுக்கு போடி காமராஜர் வித்யலயா பள்ளி தலைமை ஆசிரியர் எல்லம்மாள் தலைமை வகித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Related Stories: