வேதாரண்யம், மே 30: வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழாவில் மயானக் கொல்லை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் வீதியுலா மஞ்சள் விளையாட்டுடன் நடைபெற்றன. நேற்று பரிவார தெய்வங்களான பெரியாச்சி காளி, காட்டேரி இடும்பன் ஆகியவை கோயிலிலிருந்து சுடுகாட்டிற்கு புறப்பட்டு சென்று அங்கு சுவாமிகள் நடனமாடி பின்பு பக்தர்களுக்கு சுடுகாட்டில் கோயிலின் பூசாரி வகையறாவான தெலுங்கு மனை செட்டியார் குடும்பத்தினரின் கடைசியாக இறந்து எரிக்கப்பட்டவரின் சாம்பல் மற்றும் கோயில் விபூதி பச்சையரிசி ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினர்.