திருவண்ணாமலை, மே 29: திருவண்ணாமலை அருகே ஹார்லிக்ஸ் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றியதால் அதிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. திருவண்ணாமலை-வேலூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 3 மணியளில் சரக்கு லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது, டோல்கேட் அருகே லாரியை டிரைவர் ஓய்வெடுப்பதற்காக நிறுத்தியுள்ளார். அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக லாரியிலிருந்து புகை வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந் டிரைவர் உடனடியா லாரியில் ஏறி பார்த்துள்ளார். அப்போது, வண்டியிலிருந்த ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென பற்றி எறிய தொடங்கியது.