தேர்தல் வெற்றி இனிப்பு வழங்கி திமுக கொண்டாட்டம்

வருசநாடு, மே 28:  ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையொட்டி வருசநாடு அருகே திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். வருசநாடு அருகே  குமணன்தொழு கிராமத்தில் வீடு, வீடாக பொதுமக்களுக்கு திமுகவினர் லட்டு வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி கூறுகையில், தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிக இடங்களை வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை கடமலை- மயிலை ஒன்றியத்தில் திமுக கொண்டாடி வருகிறது என்றார்.

Related Stories: