சீர்காழி, மே 28: சீர்காழி அருகே மங்கைமடம் மெயின் ரோட்டில் அபய ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 16ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நேற்று காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர் சீர்காழி அருகே மங்கை மடம் அபய ஆஞ்சநேயர் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றபோது