வைகாசி திருவிழாவையொட்டி மகா காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

காரைக்கால், மே 28: காரைக்கால் வேட்டைக்காரன் தெருவில் உள்ள மகா காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காரைக்கால் வேட்டைக்காரன் தெருவில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவில் வைகாசித்திருவிழா, கடந்த 18ம் தேதி  ஸ்ரீ மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, அன்று இரவு சக்தி கரகம் புறப்பாடு, விஷேச அபிஷேக ஆராதனை நடைபெற்றது. 20ம் தேதி ஊர் காவடி நடைபெற்றது. 22 மற்றும் 24ம் தேதி விஷேச அபிஷேக ஆராதனையும், அம்பாள் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று (28-5-19) மாலை சந்தனகாப்பு ஆலங்காரமும், புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்ற உள்ளது. 29ம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜூன் 3ம் தேதி வீரன் படையடலுன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக்குழு, விழா குழு மற்றும் தெருவாசிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related Stories: