கூத்தாநல்லூர், மே 28: கூத்தாநல்லூர் மார்க்கெட் ரோட்டில் வாகனங்களுக்கும், பாதசாரிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கும் பள்ளத்தை மூடவேண்டும் என பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கூத்தாநல்லூர் பாய்க்கார பாலம் அருகே அமைந்து இருப்பது கூத்தாநல்லூர் மார்க்கெட் ஆகும். இதன் அருகில் தான் கூத்தாநல்லூர் பொதுகுடிநீர் மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி, சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் அமைந்து இருக்கின்றன. மேலும் இந்த பகுதியில் செல்லும் மரக்கடை சாலை கூத்தாநல்லூர் பகுதியில் இருந்து பல கிராமங்களையும் இணைக்கிறது.இந்த சாலையில் தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன. இப்படிப்பட்ட முக்கிய சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே குடிநீர் குழாய் செல்லும் பாதையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது.