ராணிப்பேட்டை, மே 28: ராணிப்பேட்டை அருகே பெரியதாங்கல் கிராம மக்கள் வித்தியாசமான முறையில் அரச மர விழுதுகளை பாதுகாக்க பனைமரங்களை வைத்து பாதுகாத்துள்ளனர்.வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதாங்கல் கிராமத்தில் உள்ள தெங்கால் பெல் சாலையில் பிள்ளையார் கோயில் எதிரில் பெரிய அரசமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் கிளிகள் உள்ளிட்ட பறவைகள் தங்கியுள்ளன. மேலும் தெங்கால் பெல் உட்பட பல்வேறு இடங்களுக்கு செல்வோர் இந்த அரச மரத்தின்கீழ் சிறிது நேரம் தங்கிவிட்டும் பிள்ளையாரை வழிபட்டும், அங்கு உள்ள குடிநீர் ெதாட்டியில் குடிநீர் குடித்துவிட்டும் இளைப்பாறி விட்டும் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.