திருத்துறைப்பூண்டியில் உலக மன சிதைவு தின கையெழுத்து இயக்கம்

திருத்துறைப்பூண்டி, மே 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகம், சென்னை தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்பு சார்பில் உலக மன சிதைவு தினத்தையொட்டி மனநலம் பாதித்தவர்களை சமுதாயத்தில் ஏற்றுக்கொள்வோம் என்பதை வலியுறுத்தி காமராஜர் சிலை அருகில்  கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுமக்களுக்கு மனநலம் காப்போம் என்பது குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமை வகித்தார்,  நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், டாக்டர் ராஜா ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை பேனரில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர். இதில் வக்கீல்கள் சங்க தலைவர் சசிகுமார், வக்கீல் கதாபொற்செழியன்,  புரொபஷனல் கூரியர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடு களை மனநல காப்பக ஒருங்கிணைப்பாளர் விஜயா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். மனநலம் குறித்தும்  பாதிக்கப்பட்டவர்களை சமுதாயத்தில் ஏற்போம் என்பது குறித்தும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் நடந்தது.

Related Stories: